Archive for June, 2007
கொப்பும் குலையுமாக சிவாஜி ஸ்ரேயா!
Posted by naagooraan on June 17, 2007
Posted in Uncategorized | 1 Comment »
சதுர்வேதியும் + நீங்களும் & இந்து மதமும்!
Posted by naagooraan on June 11, 2007
Posted in Uncategorized | 1 Comment »
ரஜினி – தி மொட்ட பாஸ்!
Posted by naagooraan on June 8, 2007
Posted in Uncategorized | Leave a Comment »
கருமம்! இதை படிக்காதீங்க!!
Posted by naagooraan on June 7, 2007
Posted in Uncategorized | 1 Comment »
சரோஜா சாமான் நிக்கோலா…!
Posted by naagooraan on June 6, 2007
Posted in Uncategorized | Leave a Comment »
அமைச்சர் ஆனார் கனிமொழி!
Posted by naagooraan on June 6, 2007
Posted in Uncategorized | 5 Comments »
50 பேர் ஆண்கள்! ஒரே ஒரு பெண்!
Posted by naagooraan on June 5, 2007
Posted in Uncategorized | Leave a Comment »
முட்டா புண்ணாக்கு தமிழகம்! M.P.கனிமொழி!
Posted by naagooraan on June 1, 2007
ஜூனியர் விகடன் கேள்வி :
உங்கள் சகோதரர் ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, ‘நானா ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின் போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தார்!’ என்று உங்கள் அப்பா முன்பொருமுறை சொல்லிருக்கிறார். 3 வருடங்களுக்கு முன்னால் தயாநிதிமாறன் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார்… அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும் போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?
கனிமொழி பதில் :
“உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள். தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களை செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.
அதே சமயம், ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்… ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடு முரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்து தான் பாதிக்கிறது. வாரிசுகளும் அவரது பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது.
இருந்தாலும், தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.
நீங்கள் குறிப்பிடும் ‘திணிப்பு’ என்ற வார்த்தயை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பொறுத்த வரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகுகாலத்துக்கு உட்கார வைத்து விட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால் அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுகொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக அண்ணனை… அவரை கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிபடியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, ‘திணிப்பு’ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்”
இப்பொழுது சிவாஜியின் (பேர கேட்டவுடனே சும்மா அதிருதா……!) கேள்விகள்!
இன்னொரு முறை மேலே உள்ள ஜூனியர் விகடனில் வந்த கனிமொழியின் பேட்டியினை படியுங்கள்!
எத்தனை சால்ஜாப்புகள்!, இந்த 4 வார்த்தைகளை கவனியுங்கள்!
‘அதேசமயம்’, ‘இருந்தாலும்’, ‘ஆனால்’, ‘ஒவ்வொருவரும்’
//// “உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள்.////
உலகத்திலுள்ள கட்சி தலைவர்கள் எல்லாம் வாரிசுகளுக்காக வேறு யாரும் வளர்ந்துவிடாமல் பார்த்து கொள்ளவில்லை, உங்கள் அப்பா அதை அட்சரம் பிசகாமல் செய்து வருகிறார்! உலகத்தில் உள்ள வாரிசுகள் எல்லாம் கட்சியால் கொண்டு வரபட்டவர்கள், அமெரிக்காவை சொல்லி இருக்கிறீர்கள்! புஷ் ஷின் அப்பாவிற்க்கு பிறகு கட்சிக்கு வேறு வேறு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்! நாட்டையும் ஆண்டிருக்கிறார்கள்!
இங்கு உங்கள் குடும்பத்தில் உள்ளவரை தவிர்த்து வேறு யாரும் கட்சிக்கு தலைவர் ஆகிவிட முடியுமா?
முதலமைச்சராக யாரும் ஆகிவிட முடியுமா?
முடியுமானால், எப்பொழுது முடியும் என்று சொல்லுங்கள்!
இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்து பதவி ஏற்கும் நிலையில் உள்ளவர்களை தாங்கள் பட்டியல் போட முடியுமா?
மூச்சுக்கு 300 முறை தொண்டர்கள் தொண்டர்கள் என்று சொல்லுகிறீர்களே, ஏன் திமுகவினர் என்று கூற வாய் வரவில்லையோ? எப்படி வரும், திமுகவினரை வெறும் “தொண்டர்களாகவே” உணர்ந்து இருக்கிறீர்கள் இதுவரையிலும்! தங்கள் அப்பாவும் அப்படித்தான் கூறுவார்!
ராஜ பரம்பரை அயிற்றே இருக்காதா பின்னே…!
//// இருந்தாலும் , தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.////
தங்களை கொண்டுவந்த அந்த மூத்த தலைவர், அனுபவசாலி யார்? சொல்லுவீர்களா?
தங்களை கொண்டுவந்த காலச்சூழல், வெரும் உங்கள் குடும்ப காலச்சூழல் தானே? அல்லது இந்த தமிழ் நாட்டுக்கு தங்களின் அரசியல் தேவை என்ற ஒரு காலச்சூழலா? இந்த காலச்சூழல் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்!
//// தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, ‘திணிப்பு’ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்” ////
ஆக இதை எல்லாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர,
நீங்கள் சரி ஆகத்தான் செய்கிறீர்கள்,
நாம் தான் (தமிழகம் தான்) திணிப்பு அது இது என்று புரிந்து கொள்ளாமல் பினாத்துகிறோம்!
இந்த ‘நன்னாரிக்கு’ தெளிவு கொடுத்த கனிமொழி அக்கா வுக்கு ஒரு “ஓ” போடுவோம்!
Posted in Uncategorized | Leave a Comment »