நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

Archive for May, 2009

பார்ப்பணர்களை குறை கூறத்தேவையில்லை!

Posted by naagooraan on May 14, 2009

பார்ப்பணர்களை குறை கூறத்தேவையில்லை, தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? காங்கிரஸின் ஆட்சி முடிந்து, (பார்ப்பணர்களின் ஆட்சி முடிந்து?)
திராவிடர்களின் பொற்காலம் மலர்ந்து 40 திரு ஆண்டுகள் முடிந்து விட்டது,
என்ன நிலைமை இப்பொழுது…??
நமது ஆட்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயம்
(இந்த வேலை நடக்கணும்ணா இவ்ளோ ஆகும்களே, கூசாமல், கால்மேல் கால் போட்டுகொண்டு நம்ம ஆளுங்க பேசும்போது, அட டா…)
செய்ததுதான் சாதனை!
வரிசையாக ஒரு குடும்பத்தை ராஜ குடும்பமாக்கி அவர்களிடம் ஏமாந்ததுதான் நம்ம சாதனை! தயாநிதிமாறன் ஓரு ஐபிஎஸ் அதிகாரியால் சுனாமி நேரத்தில் நாகப்பட்டினத்தில் சிறிதளவே தொடப்பட்டதற்கு, சரியான ஒரு அறை வாங்கினார். நானே பார்த்தது! (அறைவாங்கியது போலிஸ் உயர் அதிகாரி!)
பதவியும் காசும் இருந்தால் தாழ்ந்த சாதியும் இப்படித்தான் இருப்பார்கள்,
எல்லா ஊரிலும் சாதிச்சண்டைகள் நமக்குள்ளேயேதான், பார்ப்பணர்களோடு இல்லை,
பார்ப்பண எதிர்ப்பை ஒதுக்கி விட்டு நமக்குள் இருக்கும் குறைகளை பற்றி விவாதித்து மேன்மை அடைவோம்!

கவிதாவின் இந்த பதிவை பார்த்து, எழுதிய பதிவு இது!
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/05/blog-post_2854.html

Posted in Uncategorized | Leave a Comment »