சற்று முன் மக்கள் தொலைக்காட்சியில் திரு குழந்தைசாமி அவர்கள் பினாத்திகொண்டிருந்தார், அந்த சமயத்தில் மொழி திரைபடம், ஹிட் மேல ஹிட், பாட்ஷா படம், ஹரிஹரனின் பாடலுடன் கூடிய கிறுக்குதனம் ஆகியவை மற்ற தொலைக்காட்சிகளில் ஓடிகொண்டிருந்தது.
நான் அனைத்தையும் தவிர்த்து தமிழ் உணர்வு மேலிட மக்கள் தொலைக்காட்சியின் தமிழ் ஜல்லியை பார்த்து கொண்டிருந்தேன்.
கு.சாமி பெரியாரை பற்றி பெரிய அபிப்ராயம் வைத்திருக்கிறார், அதே சமயம் தமிழை போற்றுவோம் என்றும் கூறுகிறார், முரண்பாடு, மதம் மேல் நம்பிக்கை தேவை இல்லை அந்த அடையாளமே மனிதனுக்கு தேவையில்லையாம், ஆணால் தமிழன் என்று சொல்லனுமாம்!
வெங்காயம்!!
ஆங்கில மோகத்தை வேரறுத்த பிறகுதான் தமிழின் பெருமை மக்களுக்கு புரியும், அந்த மோகத்தை வேரறுக்க வேணுமெனில் அதை இலக்கண சுத்தமாக கிராமத்திலிருந்து ஆரம்பித்து அனைவருக்கும் கற்று கொடுத்து விடுவதே!